ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் தொடர்பில் அமுல்படுத்தப்படும் சட்டம்

ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் மாதாந்த கொடுப்பனவுகளை பெறும் அனைவரும் இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கை இன்று (01) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக உள்நாட்டு வர்த்தமானிக்கு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், வணிகங்கள், சொத்துக்கள் அல்லது குறிப்பிட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் உட்பட பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சராக வர்த்தமானி அறிவித்தலில் … Continue reading ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் தொடர்பில் அமுல்படுத்தப்படும் சட்டம்